search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டம் அதிகரிப்பு"

    • இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.
    • மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பணிகள் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து அவர்கள் மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணம் செய்தனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது. 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன. மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதனால் அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்களும் இயக்கப்பட்டன. காலை 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு காலை 10 மணி முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்தனர். இன்று இரவு 8 மணி வரை கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. பின்னர் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    • வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலா செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் மலைரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மேலும் கூடுதலாக மலை ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அந்தவகையில் வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட்கிழமை வரை 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில் குன்னூர்-ஊட்டி இடையே காலை 8.20 மணிக்கும், ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.

    இதுதவிர மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும். மேலும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இதே போல ஊட்டி-கேத்தி இடையே வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு காலை 9.45 மணி, காலை 11.30 மணி, மாலை 3 மணி என்ற இடைவெளிகளில் சிறப்பு மலைரெயில்கள் இயக்கப்படும்.

    ஊட்டி-குன்னூர் இடையேயான மலை ரெயிலில் உள்ள 5 பெட்டிகளில் 80 முதல் வகுப்பு, 130 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 210 இருக்கைகள் அமையும். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 4 ரெயில் பெட்டிகளில் 40 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் இடம்பெற்றிருக்குமென தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    ×